செய்திகள்
ஏவுகணை சோதனை

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது இந்திய கடற்படை

Published On 2020-10-30 12:33 GMT   |   Update On 2020-10-30 14:10 GMT
வங்கக் கடலில் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
கப்பலை தாக்கி அழிக்கும் சோதனையை, இந்திய கடற்படை நடத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. வங்கக் கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை, துல்லியமாக தாக்கியது எனத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News