செய்திகள்
ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கிலோ பிரியாணி - நூதன அறிவிப்பால் பொதுமக்கள் குவிந்தனர்
மேல்மருவத்தூர் அருகே ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக கூறியதால் அந்த கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஞானவேல். மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்ததையடுத்து பண்டமாற்று முறையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக நூதன அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் ½ கிலோ தக்காளி இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.