லைஃப்ஸ்டைல்
இந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....
தேவையான பொருட்கள்
கிராம்பு - 10
வெண்ணெய் - கால் டீஸ்பூன்
பனை வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:
10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும்.
நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும்.
அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும்.
கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.
பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.