செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,318 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2021-05-16 15:38 GMT   |   Update On 2021-05-16 15:38 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 974 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,389 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 59,318 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், 974 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 53,78,452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 48,26,371 பேர் குணமடைந்துள்ளனர். 81,486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 4,68,109 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



மும்பையில் 1544 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர். 35,702 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News