ஆன்மிகம்
முருகன்

கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-10-26 06:09 GMT   |   Update On 2021-10-26 06:09 GMT
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 69-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 4-ந்தேதி மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 10-ந் தேதியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 23-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News