உள்ளூர் செய்திகள்
மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனம் தடுத்து நிறுத்தம்
கொள்ளிடம் அருகே மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 52). இவர் பூங்குடி கிராம மெயின் ரோட்டில் லாரியை பிரசார வாகனமாக மாற்றம் செய்து தாம் சார்ந்த மதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இதனை அறிந்த கொள்ளிடம் பா.ஜ.க ஒன்றிய தலைவர் நேதாஜி, மாவட்ட துணைத்தலைவர் சுஜாதா ஆகியோர் நேரில் சென்று மத பிரசாரம் செய்து கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் கொரோனா கட்டுப்பாடு இருந்து வருவதால் இதுபோன்ற பிரசாரத்தை தற்போது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி மீண்டும் அவர்களிடம் வாகனத்தை திருப்பி வழங்கினர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.