ஆன்மிகம்
தென்காளஹஸ்தி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 நாட்கள் நடக்கிறது
ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் உள்ள தென்காளஹஸ்தி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 26-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் தென்காளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சனீஸ்வரர் திருநள்ளாரில் இருந்து முறைப்படி கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா 26-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 11 மணிக்கு சனீஸ்வரருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு லெட்சுமி பூஜையும், சனீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரமும், தேவாரமும், திருவாசகமும் பாடப்பட்டு தீபாராதனை நடக்கிறது. 4 மணிக்கு ஸ்ரீருத்ர மகர சனீஸ்வர யாக பூஜையும், 16 வகை அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6.01 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.
இங்கு அஷ்டம சனி, ஏழரை சனி, பொங்கு சனி, மங்கு சனி, அர்த்தாஸ்டம சனி உள்ளவர்களுக்காக 1.008 சனீஸ்வர காயத்ரி மந்திரங்கள் பரிகார குருக்கள் பாலா, கோமதி சங்கர் ஆகியோரால் ஓதப்படுகிறது.
இதில் மகரம், கும்பம், மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு ராசிகாரர்களுக்கு பரிகாரமும், மீனம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், ராசிகாரர்களுக்கு அர்ச்சனையும் நடத்தப்படுகிறது.
இங்கு 26-ந்தேதி காலை முதல் 27-ந்தேதி இரவு 10 மணி வரை பரிகார பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி தலைவர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ். மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 11 மணிக்கு சனீஸ்வரருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு லெட்சுமி பூஜையும், சனீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரமும், தேவாரமும், திருவாசகமும் பாடப்பட்டு தீபாராதனை நடக்கிறது. 4 மணிக்கு ஸ்ரீருத்ர மகர சனீஸ்வர யாக பூஜையும், 16 வகை அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6.01 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.
இங்கு அஷ்டம சனி, ஏழரை சனி, பொங்கு சனி, மங்கு சனி, அர்த்தாஸ்டம சனி உள்ளவர்களுக்காக 1.008 சனீஸ்வர காயத்ரி மந்திரங்கள் பரிகார குருக்கள் பாலா, கோமதி சங்கர் ஆகியோரால் ஓதப்படுகிறது.
இதில் மகரம், கும்பம், மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு ராசிகாரர்களுக்கு பரிகாரமும், மீனம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், ராசிகாரர்களுக்கு அர்ச்சனையும் நடத்தப்படுகிறது.
இங்கு 26-ந்தேதி காலை முதல் 27-ந்தேதி இரவு 10 மணி வரை பரிகார பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி தலைவர் ஏகாம்பரம் ஐ.ஏ.எஸ். மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.