உள்ளூர் செய்திகள்
முககவசம் அணியவில்லை என்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையாளர் விநாயகம் உத்தரவின்பேரில் பல்லடம் பஸ் நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முக கவசம் அளிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடம் அடுத்த முறை முககவசம் அணியவில்லை என்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பப்பட்டனர் .
நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் தலைமையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.