செய்திகள்
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 8,318 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,933 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,677 பேர் அடங்குவர். மொத்தபாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,933 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 10,967 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 73,58,017 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,677 பேர் அடங்குவர். மொத்தபாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,933 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 10,967 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,07,019 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 541 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 73,58,017 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.
நாடு முழுவதும் இதுவரை 63.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று 9,69,354 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... ஆன்லைனில் பதிவு செய்தால் ஆட்டோ கட்டணத்துக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.- மத்திய அரசு அறிவிப்பு