செய்திகள்
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கென்யாவுக்கு சென்றார்
இந்தியாவும், கென்யாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளாக பணியாற்றி வருகின்றன.
நைரோபி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான நைரோபிக்கு சென்று இறங்கிய அவரை அந்த நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரி அபாபு நமவாம்பா வரவேற்றார்.
இந்திய, கென்ய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ச்சியான சந்திப்புகளை ஜெய்சங்கர் நடத்துவார் என்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய, கென்ய கூட்டு கமிஷனின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான நைரோபிக்கு சென்று இறங்கிய அவரை அந்த நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரி அபாபு நமவாம்பா வரவேற்றார்.
இந்திய, கென்ய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ச்சியான சந்திப்புகளை ஜெய்சங்கர் நடத்துவார் என்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய, கென்ய கூட்டு கமிஷனின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.