செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2021-10-08 14:13 GMT   |   Update On 2021-10-08 14:13 GMT
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் ஆதர் ஷர்மா. இவரது மனைவி சந்திர பிரபா (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். சந்திர பிரபாவின் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், மனமுடைந்த சந்திரபிரபா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News