செய்திகள்
கோப்புபடம்

சிவகாசி அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2021-04-04 12:53 GMT   |   Update On 2021-04-04 12:53 GMT
சிவகாசி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சானார்பட்டி விலக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதிவீரன்பட்டியை சேர்ந்த காசிநாதன் (வயது 46) என்பவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்த போது அவர் 48 மதுபாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோட்டில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள வேன்நிறுத்தம் அருகில் பழனிசாமி (42), அருண்பாண்டி (27) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News