ஆன்மிகம்
மாத பிரசாதங்களும் தீரும் பிரச்சனைகளும்

மாத பிரசாதங்களும் தீரும் பிரச்சனைகளும்

Published On 2020-11-05 04:30 GMT   |   Update On 2020-11-05 04:30 GMT
ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் கொடுக்க வேண்டிய பிரசாதங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* சித்திரை - தயிர் சாதம், நீர் மோர் - உடல்சூடு, எலும்புருக்கி நோய் விலகும்.

* வைகாசி - பால், சர்க்கரை பொங்கல் - எல்லாவித வயிற்றுக் கோளாறு நீக்கி சுகமடைதல்.

* ஆனி- தேன், தினை மாவு - மலட்டுதன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* ஆடி - வெண்ணை சர்க்கரை சேர்த்து - கொழும்பு சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்.

* ஆவணி - தயிர் சாதம் - காரியத்தடை, நோய்களில் இருந்து விடுபடுதல்.

* புரட்டாசி - புளியோதரை, சர்க்கரை பொங்கல் - விஷகடி, தோல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

* ஐப்பசி - உளுந்தவடை, ஜிலேபி - சீதளமான நோய் விலகும்

* கார்த்திகை - தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம் - பெண்களுக்கு கர்ப்ப சம்பந்தமான நோய், அடி வயிறு நோய் தீரும்.

* மார்கழி - வெண் பொங்கல், சுண்டல் - மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

* தை - தயிர் ஏட்டில் தேன் சேர்த்து தானம் கொடுக்க - விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

* மாசி - நெய்யுடன் சர்க்கரை - சிறு நீரகக் கோளாறுகள், மந்தம், வயிறு உப்பிசம் போன்றவை விலகும்.

* பங்குனி - தக்காளி சாதம், தேங்காய் சாதம் - மனக்கிலேசம், மனக்காளாறுகள் பித்தம் போன்றவை விலகும்.
Tags:    

Similar News