செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவில் வளாக பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலின் உள்பகுதியிலும் நுழைவு பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.