உள்ளூர் செய்திகள்
துறையூரில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோபனபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முரளி வயது 32. இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்கிற மனைவி உள்ளார்.
முரளி நாமக்கல்லில் உள்ள லாரி புக்கிங் ஆபிஸ் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தானுக்கு சரக்கு கொண்டு சென்று வந்ததில் முரளி ரூபாய் 50 ஆயிரம் கையாடல் செய்ததாகவும், இது தொடர்பாக லாரி புக்கிங் நிறுவனம் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி கடந்த 7ந் தேதி மனைவியுடன் தொலைபேசியில் பேசிய அவர் அதன் பிறகு குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை.
இதனையடுத்து நேற்று இரவு முரளி துறையூர் பெரம்பலூர் பைபாஸ் சாலையில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முரளியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோபனபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முரளி வயது 32. இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்கிற மனைவி உள்ளார்.
முரளி நாமக்கல்லில் உள்ள லாரி புக்கிங் ஆபிஸ் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தானுக்கு சரக்கு கொண்டு சென்று வந்ததில் முரளி ரூபாய் 50 ஆயிரம் கையாடல் செய்ததாகவும், இது தொடர்பாக லாரி புக்கிங் நிறுவனம் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி கடந்த 7ந் தேதி மனைவியுடன் தொலைபேசியில் பேசிய அவர் அதன் பிறகு குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை.
இதனையடுத்து நேற்று இரவு முரளி துறையூர் பெரம்பலூர் பைபாஸ் சாலையில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முரளியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.