செய்திகள்
கைதான லிங்கராஜ்.

திருப்பூரில் புகையிலை பொருட்களை விற்ற மளிகை கடைக்காரர் கைது

Published On 2021-10-09 07:56 GMT   |   Update On 2021-10-09 07:56 GMT
வீரபாண்டி போலீசார் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
திருப்பூர்: 

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வித்யாலயம் பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருக்கும் குடோன் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  

அந்த தகவல் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வித்யாலயம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 4 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (வயது 48) என்பவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் தென்னம்பாளையம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருவதும், மேலும் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து லிங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News