தொழில்நுட்பம்
பேஸ்புக்

பாஜக கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பேஸ்புக்

Published On 2020-08-17 10:31 GMT   |   Update On 2020-08-17 10:31 GMT
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
 

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார். 

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, "இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.”என்று கூறியிருந்தார்.



ராகுலின் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேஸ்புக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் கூறும் வகையில், “யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக் பாரபட்சமற்ற தனது  கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து  பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வன்முறையை தூண்டும் வகையிலான  வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி சார்பற்று உலக அளவில், எங்களது கொள்கைகளை அமல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News