செய்திகள்
விராட் கோலி - டேவிட் கோவர்

5-வது டெஸ்ட் ரத்துக்கு முன்பு கோலி நள்ளிரவில் இமெயில் அனுப்பினார் - இங்கிலாந்து முன்னாள் வீரர் தகவல்

Published On 2021-09-15 08:10 GMT   |   Update On 2021-09-15 08:10 GMT
5-வது டெஸ்ட்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார்.

லண்டன்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது டெஸ்ட்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இமெயில் அனுப்பினார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கடைசி நேரத்தில் போட்டியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக விராட் கோலி இந்த இமெயிலை நள்ளிரவில் அனுப்பினார்’ என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News