செய்திகள்
வெள்ளகோவிலில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்,தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உடல் நலம் பேணி காப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமக்கு எந்த வகையில் நமது உடல்நலத்தை பாதுகாக்க முடியும் என்பது பற்றி எடுத்துக் கூறினார். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.