செய்திகள்
விபத்து பலி

கோவை அருகே விபத்து- முதியவர் பலி

Published On 2021-04-30 10:09 GMT   |   Update On 2021-04-30 10:09 GMT
கோவை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை கணபதிபுதூர் அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காந்திபுரம் 100 அடி ரோடு 7-வது வீதி சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மொபட் ராதாகிருஷ்ணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News