செய்திகள்
தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2021-09-13 07:09 GMT   |   Update On 2021-09-13 07:09 GMT
நெல்லை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலேயே புது மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது மனைவி பிரிந்து தாய் வீடு சென்று விட்டார்.

இதனால் முத்துக்குட்டி கவலையுடன் காணப்பட்டார். முத்துக்குட்டியின் உறவினர்கள் பெண் வீட்டாரிடம் சமரசம் பேசி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குட்டி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News