ஆன்மிகம்
அழகப்பபுரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா
அழகப்பபுரம் அருகே திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
அழகப்பபுரம் அருகே திருமூலநகரில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இங்கு திருவிழா கடந்த 14-ந் தேதி வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
விழாவின் 9-ம் நாளன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி, அதை தொடர்ந்து சவேரியார்புரம் பங்குத்தந்தை செல்வ ஜார்ஜ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடந்தது.
10-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் திருமூலநகர் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
விழாவின் 9-ம் நாளன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி, அதை தொடர்ந்து சவேரியார்புரம் பங்குத்தந்தை செல்வ ஜார்ஜ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடந்தது.
10-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் திருமூலநகர் பங்கு மக்கள் செய்திருந்தனர்.