செய்திகள்

மைதானத்திற்குள் ரசிகரிடம் பிடிபடாமல் இருக்க வீரர்களுக்கு பின்னால் ஓடி ஒளிந்த டோனி

Published On 2019-03-05 14:01 GMT   |   Update On 2019-03-05 14:01 GMT
நாக்பூர் மைதானத்திற்குள் புகுந்த ரசிகரிடம் பிடிபடாமல் இருக்க டோனி ஒவ்வொரு வீரர்களுக்கும் பின்னால் ஓடி ஒளிந்த வீடியோ வைரலாகி வருகிறது. #MSDhoni
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்வதற்காக மைதானத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது டோனியின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி வீரர்களை நோக்கி ஓடிவந்தார். அப்போது டோனியை கட்டிப்பிடிக்க முயன்றார். ரசிகரிடம் இருந்து தப்பிக்க டோனி ஒவ்வொரு வீரர்களின் முதுகுக்குப்பின் ஒளிந்து ஓடினார்.

இருந்தாலும் அந்த ரசிகர் விடவில்லை. தொடர்ந்து டோனியை விரட்டினார். இறுதியாக ஆடுகளம் அருகே சென்றபோது டோனியை அந்த ரசிகர் நெருங்கி, அவரை கட்டிப்பிடித்தார்.

ரசிகர் ஒருவர் இந்தக்காட்சியை தனது செல்போனில் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News