செய்திகள்
கோப்புபடம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிகரிக்கும் வாகன விபத்து - போக்குவரத்து விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படுமா?

Published On 2021-01-12 13:14 GMT   |   Update On 2021-01-12 13:14 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து ெகாண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

வாகனங்களில் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை. ஆதலால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்த விபத்துகளில் ஒரு சிலர் காயமும், ஒரு சிலர் இறப்பையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சிலர் தங்களது கால், கைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த விதிமுறைகளை ஒரு சிலர் தான் பின்பற்றுகின்றனர்.

வாகன விபத்துகளை தடுப்பது குறித்து மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், ஊர்வலங்களும் நடைபெற்று வந்தால் மக்கள் அதை கண்டு கொள்வதில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன்் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 129 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

62 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் தினமும் நடக்கின்றன.

விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகன உரிமங்களை ரத்து செய்வது என என்ன தான் தண்டனை விதித்தாலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

எது எப்படி இருந்தாலும் இனியாவது விபத்துகளை குைறக்க போக்குவரத்து விதிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News