செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்

Published On 2021-10-27 06:38 GMT   |   Update On 2021-10-27 06:38 GMT
முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் அரசு வக்கீலாக விவேகானந்தன், 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டின் கூடுதல் அரசு வக்கீலாக பூமதி நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மற்றும் சப்-கோர்ட்டுகளில் அரசு வக்கீல் மற்றும் பிளீடர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் கூடுதல் அரசு வக்கீலாக விவேகானந்தன், 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டின் கூடுதல் அரசு வக்கீலாக பூமதி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் கோர்ட்டு அரசு வக்கீலாக ஜமீலா பானு, முதன்மை சார்பு கோர்ட்டு கூடுதல் அரசு வக்கீலாக பஷீர் அகமது, கூடுதல் சப்-கோர்ட்டு அரசு வக்கீலாக அரிகரன், மாவட்ட முன்சீப் கோர்ட்டு பிளீடராக தேவி நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவிநாசி சப்-கோர்ட்டு அரசு வக்கீலாக சுப்ரமணியம், மாவட்ட முன்சீப் கோர்ட் பிளீடராக வெங்கடாசலமூர்த்தி, பல்லடம் மாவட்ட முன்சீப் கோடர் பிளீடராக ரேணுகாதேவி, ஊத்துக்குளி முன்சீப் கோர்ட்டு பிளீடராக குமாரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News