செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா

Published On 2021-07-16 10:06 GMT   |   Update On 2021-07-16 10:06 GMT
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 46,277 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 46,203 ஆக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,277 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று 66 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 45 ஆயிரத்து 16 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 434 பேர் பலியான நிலையில் 827 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்து உள்ளது. இது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News