செய்திகள்
கோப்புபடம்

வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல்

Published On 2020-10-16 10:00 GMT   |   Update On 2020-10-16 10:00 GMT
வடமதுரை அருகே பொக்லைன் எந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வடமதுரை:

தாமரைப்பாடி அருகே உள்ள நாகம்பட்டி செவலைகுளம் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

அதனைத் தொடர்ந்து போலீசார் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News