உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத திருச்சி மத்திய மண்டலம்

Published On 2022-04-15 09:15 GMT   |   Update On 2022-04-15 09:15 GMT
மத்திய மண்டலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் உள்ளது.
திருச்சி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளடக்கிய  9 மத்திய மாவட்டங்களில் நேற்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

மாநில சுகாதாரத்துறை தகவலின்படி, தற்போதைய நிலையில் மத்திய மண்டலத்தில் 14 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 4 பேரும், கரூரில் 2 பேரும், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். மயிலாடுதுறை, அரியலூர், பெரும்பலூரில் யாரும் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிட தக்கது.  
Tags:    

Similar News