செய்திகள்
கஞ்சா கடத்தல்

திருவள்ளூரில் ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

Published On 2020-01-10 06:44 GMT   |   Update On 2020-01-10 06:44 GMT
திருவள்ளூரில் ரெயிலில் கடத்திய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செவ்வாய்பேட்டை:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்த போது ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான ஒரு மர்ம பை இருந்தது.

அந்த பெட்டியின் உள்ளே சென்ற போலீசார் பையை சோதனை செய்த போது அதில் 1 கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர். அதனை கைபற்றிய போலீசார் குறிப்பிட்ட இருக்கையை முன்பதிவு செய்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News