செய்திகள்
திருச்சி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி காஜாமலை ஆர்.பி.எப்.ரோடு இந்தியன் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவர் பால் பாக்கெட் மற்றும் தண்ணீர் கேன் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியில் சூர்யா நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.