செய்திகள்
கொரோனா வைரஸ்

இத்தாலியை உலுக்கும் கொரோனா -14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Published On 2020-11-21 22:48 GMT   |   Update On 2020-11-21 22:48 GMT
இத்தாலியில் ஒரே நாளில் மேலும் 34,767 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 
 
தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 34,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.80  லட்சத்தைத் தாண்டியது.

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 692 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News