செய்திகள்
கடத்தல்

நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2019-09-16 10:23 GMT   |   Update On 2019-09-16 10:23 GMT
நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே துள்ளுபட்டியை சேர்ந்தவர் மணி மகன் சபரிவாசன். இவருக்கும் நிலக்கோட்டையை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்க வில்லை. மேலும் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சபரிவாசன் இளம்பெண்ணை கடத்தியது தெரியவந்தது.

இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய சபரிவாசனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News