செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மூதாட்டி தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா செம்படமுத்தூர் அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் சென்னம்மாள் (வயது 87). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.