செய்திகள்
கைது

தர்மபுரியில் மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2019-09-03 12:51 GMT   |   Update On 2019-09-03 12:51 GMT
தர்மபுரியில் கள்ளத்தனமாக மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி போலீசார் அரசுக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது பாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து விற்பவர்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாமரத்து பள்ளம் என்ற பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சக்திவேல் என்பவர் கள்ளத்தனமாக மது விற்றதன் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும் இவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரை கள்ளதனமாக மது விற்றதன் பேரில் பாலக்கோடு போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News