உள்ளூர் செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
தஞ்சை பர்மா பஜாரில் கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்தவர் செல்வபாரதி ( 32). இவர் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பழுது பார்ப்பதற்காக
தங்களது செல்போனை கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு செல்வபாரதி வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டர்
பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வாடிக்கை-யாளர்கள் சர்வீஸ் கொடுப்பதற்காக வைக்கப்-பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்-போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை
திருடிக் கொண்டு வெளியே வந்தனர். இதையடுத்து அருகே உள்ள 2 செல்-போன் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் திருடிய செல்போன்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த செல்வபாரதி பூட்டு உடைக்கப்-பட்டு இருப்-பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்ம
நபர்கள் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.இதுகுறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலை-யத்துக்கு தகவல்
தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்-திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்-தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை
ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை சேர்ந்தவர் செல்வபாரதி ( 32). இவர் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பழுது பார்ப்பதற்காக
தங்களது செல்போனை கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு செல்வபாரதி வீட்டுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் ஷட்டர்
பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வாடிக்கை-யாளர்கள் சர்வீஸ் கொடுப்பதற்காக வைக்கப்-பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்-போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை
திருடிக் கொண்டு வெளியே வந்தனர். இதையடுத்து அருகே உள்ள 2 செல்-போன் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் திருடிய செல்போன்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த செல்வபாரதி பூட்டு உடைக்கப்-பட்டு இருப்-பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்ம
நபர்கள் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.இதுகுறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலை-யத்துக்கு தகவல்
தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்-திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்-தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை
ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.