செய்திகள்
கோவிஷீல்டு

புனேவில் இருந்து 2 லட்சத்து 45 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

Published On 2021-08-04 21:18 GMT   |   Update On 2021-08-04 21:18 GMT
தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வந்தன. பின்னர் அவை, விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆலந்தூர்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 860 தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 21 பெட்டிகளில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 340 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு வந்தன. பின்னர் அவை, விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags:    

Similar News