செய்திகள்
மீன்சுருட்டி அருகே மணல் கடத்திய வாலிபர் கைது
மீன்சுருட்டி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதியின்றி சிமெண்டு சாக்குகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் அறிந்த மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன், குலோத்துங்கன் நல்லூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவை சேர்ந்த சதாசிவம்(வயது 30) என்பதும், அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி சிமெண்டு சாக்குகளில் மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.