ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

Published On 2021-01-08 06:08 GMT   |   Update On 2021-01-08 06:08 GMT
சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.
சுக்கிரன் களத்திரகாரகன் அதாவது கணவன்-மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். கணவன்-மனைவியிடம் மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால் புது வாகன யோகமோ அல்லது வாகன யோக தடையோ ஏற்படும். 

உடலில் முதுகு தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக் கல், பிரசவ காலப்பிரச்சினை மனைவி வழி உறவுகளிடம் அடிக்கடி பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் குலசேகரப்பட்டினம் கடலில் நீராடிவிட்டு வரும் வழியில் இருக்கும் சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாளை தரிசித்து விட்டு வெள்ளை கலர் மாலை, வெள்ளை அரளி, மல்லிகை, பிச்சி போன்ற மாலைகளை சாத்தி குலசை அம்மனை வழிபட்டு வந்தால் நவகிரக நாயகி உங்களுக்கு உள்ள எல்லாவித தோஷத்தையும் நீக்கி தருவாள்.
Tags:    

Similar News