தொழில்நுட்பம்
ஆப்பிள் லோகோ

இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றும் ஆப்பிள்

Published On 2019-07-26 11:25 GMT   |   Update On 2019-07-26 11:25 GMT
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபாரத்தை கைப்பற்ற இருக்கிறது.



ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் வியாபார பிரிவின் பெரும்பான்மை பங்குகளை வாங்க இருப்பதை ஆப்பிள் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இதற்கென ஆப்பிள் நிறுவனம் 100 கோடி டாலர்களை இன்டெல் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது.

இருநிறுவனங்கள் இடையே இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், இன்டெல் நிறுவனத்தின் 2200 ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்து கொள்வர். இத்துடன் இன்டெல் காப்புரிமை, உபகரணங்கள் மற்றும் லீஸ்களும் ஆப்பிள் வசம் கைமாறிவிடும்.



ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நிலவி வந்த பிரச்சனைகளை நிறுத்திக் கொண்டு சுமூக உடன்படிக்கை எடுத்துக் கொள்வதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்டெல் நிறுவனம் தனது 5ஜி மோடெம் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.

புதிய காப்புரிமைகளுடன் சேர்த்து ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 17,000-க்கும் அதிக வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகளை பெற்றிருக்கிறது. இன்டெல் நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அல்லாத சாதனங்களுக்கு மோடெம்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும்.

இன்டெல் 5ஜி மோடெம் வியாபாரத்தை வாங்குவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க முடியும்.
Tags:    

Similar News