செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மண்டையூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பிடாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஓனாங்குளம் என்ற இடத்தில் முள்ளிப்பட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 36), ரமேஷ் (30), பூரணி (41), முத்துக்கருப்பன் (40) உள்பட 12 பேர் பணம் வைத்து சூதாடினர். இதனையடுத்து போலீசார், அந்த 12 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.