செய்திகள்
12 பேர்கள் கொண்ட வீராங்கனைகள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டி- 12 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு

Published On 2021-02-21 15:03 GMT   |   Update On 2021-02-21 15:03 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிக்கு 12 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிப்காட் (ராணிப்பேட்டை):

முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெண்கள் கைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இப்போட்டியில் விளையாட ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில், நிவேதா, கஜலட்சுமி, இந்துமதி, அபிநயா, காவியா, ரம்யா, சரிதா, தமீனா

சர்மிளா, தமிழ்ச்செல்வி, காயத்ரி, ரம்யா ஆகிய 12 பேர்கள் கொண்ட வீராங்கனைகள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அணி மேலாளர் எம்.சரவணன் தலைமையில் பங்கேற்க உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நோயலின் ஜான், தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டிக்கு செல்லும் இவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், ராணிப்பேட்டை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் கே.சரவணன், வேலூர் மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சையத் கதிர் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News