செய்திகள்
கோப்புப்படம்

லக்கிம்பூர் வன்முறை வழக்கில் நான்கு பேர் கைது: துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்

Published On 2021-10-18 14:32 GMT   |   Update On 2021-10-18 14:32 GMT
விவசாயிகள் மீது கார் ஏற்றியதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிபூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது உ.பி. துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் உடன் வந்த கார் விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பின் வன்முறை ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று சுமித் ஜெய்ஸ்வால், ஷிஷுபால், நந்தன் சிங் பிஷ்ட், சத்ய பிரகாஷ் திரிபாதி ஆகியோரை கைது செய்துள்ளனர். இதில் திரிபாதியிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News