ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுணர்மி: சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்

Published On 2021-10-19 06:46 GMT   |   Update On 2021-10-19 06:46 GMT
உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு பவுணர்மி நாளிலும் விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பவுணர்மி நாளில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகமானது தனித்துவம் வாய்ந்ததாகும். உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கம்போல சத்தியகீரிஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐப்பசி மாத பவுணர்மி (புதன்கிழமை) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்த்திட வேண்டும் என்று கோவில்துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News