செய்திகள்
நெல்லை மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலி
நெல்லை மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலியானார்.இதைத்தொடர்ந்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவரது குடும்பத்தினர்களுக்கு போன் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 58). இவர் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து, பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவரது குடும்பத்தினர்களுக்கு போன் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.