செய்திகள்
தேவ்தத் படிக்கல்

ஆர்சிபி-யின் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா

Published On 2021-04-04 10:34 GMT   |   Update On 2021-04-04 10:34 GMT
ஐபிஎல் அறிமுக சீசனில் அபாரமாக விளையாடி 473 ரன்கள் விளாசி தேவ்தத் படிக்கல், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான அவர் 473 ரன்கள் விளாசினார். சராசரி 31.53-ம் ஸ்டிரைக் ரேட் 124.8-ம் வைத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தேவ்தத் படிக்கல் முதல் இரண்டு போட்டிகளில் விளையைாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி புதிய தொடக்க வீரரை தேட வேண்டியுள்ளது.
Tags:    

Similar News