வழிபாடு
ஹம்ச, யாளி, ராவணாசூர, மயில் வாகனங்களில் சிவன், அம்பாள் உலா

பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: ஹம்ச, யாளி, ராவணாசூர, மயில் வாகனங்களில் சிவன், அம்பாள் உலா

Published On 2022-02-28 03:21 GMT   |   Update On 2022-02-28 03:21 GMT
ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Tags:    

Similar News