செய்திகள்
என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
தீராத வயிற்றுவலி காரணமாக என்ஜினீயரிங் மாணவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஜீவானந்தத்துக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்ற பிறகும் குணமடையவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஜீவானந்தத்துக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்ற பிறகும் குணமடையவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.