ஆன்மிகம்
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ரத ஊர்வலம்

முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா

Published On 2021-08-13 05:26 GMT   |   Update On 2021-08-13 05:26 GMT
முக்கூடலில் பிரசித்திப்பெற்ற நாராயணசாமி கோவில் 6-ம் நாள் திருவிழாவையொட்டி இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ரத ஊர்வலம் நடைபெற்றது.
முக்கூடலில் பிரசித்திப்பெற்ற நாராயணசாமி கோவில் 6-ம் நாள் திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ரத ஊர்வலமும் நடைபெற்றது.

15-ந் தேதி வரை நடைபெறும் 10 நாள் கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து நாடார் விஷ்ணு சபையினர் செய்துள்ளனர். 6-ம் நாள் விழா ஏற்பாடுகளை நெல்லை டவுன் தொழிலதிபர் ஏ.எஸ்.முருகையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News