செய்திகள்
மழை

கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2021-10-25 05:51 GMT   |   Update On 2021-10-25 08:27 GMT
இடுக்கி மற்றும் கோட்டயம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடானது. இடுக்கி உள்பட முக்கியமான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 15 மற்றும் 16-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடானது. இடுக்கி உள்பட முக்கியமான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.

மேலும் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவின் சில பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வருவாய்த்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கும்படி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.



Tags:    

Similar News