செய்திகள்
அசாம் மக்களில் ஒருவனாக நாளை காலை நான் இருப்பேன் - பிரதமர் மோடி
அசாமில் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தின் சிவசாகர் பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை மக்களுக்கு அவர் வழங்குகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், அசாம் மாநில மக்களில் நானும் ஒருவனாக நாளை காலை இருப்பேன். சிறந்த மாநிலம் ஆன அசாமின் உரிமைகள் மற்றும் தனித்துவ கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க, சாத்தியம் நிறைந்த ஒவ்வொரு விஷயமும் மேற்கொள்ளப்படுவதற்கு நாங்கள் ஈடுபாடு காட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.